குடிமக்கள் மீதான உத்தரகாண்ட் காவல்துறையின் வன்முறையை தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் சார்பாக நெல்பேட்டை அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை தாங்கினார்.
மதுரை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்புரை யும், வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் துவக்க உரையும் நிகழ்த்தினர்.
கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் அப்துல் காதர், செயலாளர் நிஸ்தார் உட்பட நிர்வாகிகள், ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் அபூபக்கர் சித்தீக் மற்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப் பாளர் வழக்கறிஞர் பிஸ்மில்லாஹ்கான் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
தெற்கு மாவட்ட செயற்குழுஉறுப்பினர் இப்ராஹிம் பாபுஜி, திருப்பரங்குன்றம் தொகுதி தலைவர் சைபுல்லாஹ்,கோரிப்பாளையம் வார்டு செயலாளர் ராஜா உசேன் ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இறுதியாக மதுரை தெற்கு தொகுதி தலைவர் பாட்ஷா நன்றி உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.