புதூர் நாட்டில் சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பத்தூர்,

குறைந்த செலவின கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதூர் நாடு ஊராட்சி, திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரியின் சமூகப்பணி துறை ஆகியவை சார்பில் திருப்பத்தூர் அருகே புதூர் நாடு ஊராட்சி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்ற து.

முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ஐய்யப்பன், மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

முகாமில் சர்க்கரை நோய், தொழுநோய், மார்பக புற்றுநோய், கர்பப்பை புற்றுநோய், ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் பரிசோதனை, ECG பரிசோதனை, கர்ப்பிணி பெண்களுக்கு ஊடுகதிர் பரிசோதனை, சித்த மருத்துவ சிகிச்சை, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை இல்லாதவர்களுக்கு பதிவு செய்து தரப்பட்டது. முகாமில் 200-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

முகாமில் சமூகப்பணி துறை பேராசிரியர்கள் டாக்டர் கிறிஸ்டி ஆனந்தன், டாக்டர். கிளேட்டன் மைக்கேல் ஃபோன்சிகா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தூய நெஞ்சக் கல்லூரியின் சமூகப்பணி துறை மாணவர்கள் இளவரசன், மொழிவானன் ஆகியோர் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *