தென்காசி மாவட்ட வேளாண் அறிவியல் மையம் ஊர்மேலழகியான் கிராமத்தில் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையின் மூலம் தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கத்தில் 7 நாட்கள் தேனீ வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் வட்டாரங்களை சேர்ந்த 25 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தென்காசி வேளாண் அறிவியல் மையத்தின் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் இளவரசன் மற்றும் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் பாலசுப்ரமணியன் தேனீ வகைகள், தேனீ வளர்ப்பு முறைகள், மகரந்த சேர்க்கையில் தேனீக்களின் பங்கு, தேனீ பெட்டிகளில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, தேன் எடுக்கும் முறைகள் பற்றி பயிற்சி அளித்தார்கள்.

பயிற்சியில் ஒரு நாள் கண்டுணர்வு பயணமாக ராஜபாளையம் ஷமி தேன் பண்ணைக்கு சென்று தேன் மதிப்புக்கூட்டுதல் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

நிறைவு விழாவில் தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி பயிற்சி பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் சான்றிதழ், தேனீ வளர்ப்பு தொழில்நுட்ப புத்தகம் மற்றும் தேன் எடுக்கும் உபகரணங்கள் தொகுப்பு ஆகியவற்றை வழங்கினார்.

பயிற்சி ஏற்பாடுகளை செங்கோட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் பிரவின் குமார், தோட்டக்கலை அலுவலர் ஜீனத்பேகம்,
உதவி தோட்டக்கலை அலுவலர்கள் முருகன், ஆனந்த நாக ஜோதி, இசைவாணி ஆகியோர் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *