திண்டிவனம் கிடங்கள் 1 பகுதியில் மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் என். விஜயகுமார் தலைமை தாங்கி ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் திண்டிவனம் நகர நகர பொறுப்பாளர்கள் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.