ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை மேல்பாதி தெற்கு பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையங்கோட்டை மேல்பாதி தெற்கு பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளியின் ஆண்டு விழா பணி நிறைவு பாராட்டு விழா மாணவர் சேர்க்கை விழா என முப்பெரும் விழா ஊராட்சி மன்ற தலைவர் வினிதா முருகன் தலைமையில் நடைபெற்றது

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குழந்தைவேலு பள்ளி மேலாண்மை குழு தலைவர் அலமேலு சீனிவாசன் முன்னிலை வகித்தனர்

பணி நிறைவு பெறும் ப.க. வளர்மதி இடைநிலை ஆசிரியர் அவர்களுக்கு நினைவு பரிசளித்து சிறப்பு செய்யப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் சா . இந்திரா வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் மேற்பார்வையாள முனைவர் பரமசிவம் ஆசிரியர் பயிற்றுனர், ரா.வைத்தியநாத சாமி மேலாளர் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

வரவேற்புரை தலைமையாசிரியர் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்மலா, மலைமாறன், வாசுதேவன், இடைநிலை ஆசிரியர்கள் கற்பகம் ஜூலி கிளாரா அன்புக்கனி வனிதா பீட்டர் ஆனந்தராஜ் , செல்வகுமாரி இவர்களால் விழா கலை நிகழ்வுகள் மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்டது.

காலை மதிய உணவு, அங்கன்வாடி பொறுப்பாளர்கள் மகளிர் சுய உதவி குழுக்கள்
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *