வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் சாதனை விளக்க துண்டு பிரசுரம் விநியோகம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வருமான மு. க. ஸ்டாலின் ஆணைக்கு இணங்க, திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே. கலைவாணன் எம் எல் ஏ ஆலோசனையின் படி, வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தெட்சிணா மூர்த்தி தலைமையில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் அரசின் சாதனை விளக்கும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் மோகன், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர்கள் கோபால், ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராசாத்தி, திமுக நிர்வாகிகள் மூர்த்தி, ரஞ்சித் குமார், சுரேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *