திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் வருடம் தோறும் பங்குனி மாதம் முதல் ஞாயிறு அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு கடந்த 1 ஆம் தேதி பூச்சொறிதல் விழா உடன் திருவிழா தொடங்கியது, கடந்த 3 ஆம் தேதி முதல் காப்பு கட்டுதல், 10 ஆம் தேதி இரண்டாம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி உடன் தினசரி சுவாமி வீதி உலா காட்சி நடைபெற்று வருகிறது.
நேற்று வெண்ணைத்தாழி நிகழ்ச்சியில் அம்பாள் வீதி உலாகாட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நாளை 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருவிழாவை முன்னிட்டு, காலை ஒன்பது மணி அளவில் பால்குட ஊர்வலமும், பதினோரு மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் அதனைத் தொடர்ந்து கஞ்சிவார்த்தல், மாலை நாலு மணிக்கு ஸ்ரீ அம்பாள் வீதி உலா காட்சியும், மாலை 6:00 மணிக்கு செடில் சுற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ், தக்கார்/ ஆய்வாளர் க.மும்மூர்த்தி, செட்டி தெரு நிர்வாகிகள், செட்டித் தெரு வாசிகள், ஸ்ரீ சீதளா தேவி இளைஞர் நற்பணி மன்றம், மண்டகப்படி தார்கள் மற்றும் நகர வாசிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.