அலங்காநல்லூரில் அதிமுக மகளிரணி சார்பாக தேனி நாடாளுமன்ற வேட்பாளர் நாராயணசாமி ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கல்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்
கேட்டுகடையில் அதிமுக மகளிரணி சார்பாக தேனி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் நாராயணசாமி ஆதரித்து துண்டுபிரசுரம் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு அலங்காநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், தலைமை தாங்கினார் நகர செயலாளர் அழகுராஜ், முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிரணி செயலாளர் லெட்சுமி கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் தாலிக்கு தங்கம் திட்டம் திருமண உதவித்தொகை பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் மானியத்தில், ஏழை மக்களுக்கு கரவை மாடு ஆடு வளர்ப்பு திட்டம் விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி திட்டம் பொங்கல் பரிசு 2500 என அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட எண்ணற்ற திட்டங்கள் இப்போது இல்லை என பிரசுரம் செய்யப்பட்ட நோட்டீசை பொது மக்களிடம் வழங்கி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து தெப்பக்குளம்பகுதி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, பாசறை மாவட்ட இணை செயலாளர்
உமேஷ்சந்தர், ஒன்றிய துணைச் செயலாளர் சம்பத், நகர இணைச் செயலாளர் புளியம்மாள், துணை செயலாளர் லதா, பிரதிநிதி
பாண்டிசெல்வி, பேரூராட்சி கவுன்சிலர் சுந்தர், வார்டு செயலாளர்கள் வெள்ளைகிருஷ்ணன்,
சுந்தரராகவன், கணேசன், வலசை கார்த்தி, குருணி பாஸ்கரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி,மற்றும் ஆறுமுகம், மனோகரன், ராதா, தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மற்றும் மகளிரணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்..