v சீராளன் செய்தியாளர் பண்ருட்டி.
இஸ்லாமியர்களின் புனிதமான மாதம் ரமலான் மாதத்தின் ரமலான் சிறப்பு தொழுகை.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஹஜரத் நூறு முகமது ஷா தர்கா வளாகத்தில் இருந்து இஸ்லாமியர்கள் ஜமாத்தாக ஊர் உலகமாக புறப்பட்டு அல்லாஹு அக்பர் என்ற தக்பீர் முகத்துடன் பெரிய பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் ஒருங்கிணைந்து ஊர்வலமாக தர்கா நிர்வாக அறங்காவலர் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் தலைமையில் புறப்பட்டு ஈஃத்கா மைதானத்தில் வந்தடைந்தார்கள்.
பிறகு பெரிய பள்ளிவாசல் இமாம் அவர்கள் ரமலான் சிறப்பு தொழுகை நடத்தி வைத்தார்கள் இந்த தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு உலக நலனுக்காகவும் உலக ஒற்றுமையாக வாழ வேண்டும் அனைத்து மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டு பாலஸ்தீன மக்களுக்கு அமைதி நிலவு வேண்டும் இந்தியாவில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் அனைவரும் சாந்தியும் சமாதானம் என்ற நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தார்கள்.