சித்திரை திருவிழாவை முன்னிட்டு விக்கிரமசிங்கபுரத்தில் தேரோட்டம் நடைபெற்றது –
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிவ சிவா அரகரா என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பிரசித்திபெற்ற பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபநாச நாதர் கோயில் சித்திரை விசு விழாவை முன்னிட்டு பாபநாசம் கோயிலில்
கடந்த 5 ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
இதைத்தொடர்ந்து ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் திருவிழா நடைபெற்று வந்த நிலையில் முக்கிய நிகழ்வான 9 -ம் திருநாளான இன்று காலையில் சிவந்தியப்பர் கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளினர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர். வழிநெடுக பக்தர்கள் இரண்டு புறமும் நின்று சிவ சிவா அரகரா என்ற முழக்கத்துடன் மற்றும் மேளதாள முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேரானது நான்கு ரதவீதிகளின் வழியாக சென்று மீண்டும் வி.கே.புரத்தில் உள்ள தேர் நிலையத்தை வந்தடைந்தது.
விழாவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.பக்தர்கள் கூட்டம் அதிக இருப்பதால் பாதுகாப்பு பணியில் போலீசார்,
ஊர் காவல் படையினர் மற்றும் அம்பை தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்…