அதிமுக சார்பில் தொழுப்பேடு பேருந்து நிலையத்தில்
தண்ணீர் பந்தல் திறப்பு விழா.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள தொழுப்பேடு பேருந்து நிலையத்தில்
அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் கழக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர்
எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க
வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தினை தீர்க்க
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொழுப்பேடு பேருந்து நிலையத்தில் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மருத்துவர் ரங்கராஜன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருகழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர்
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினருமான மரகதம் குமரவேல்,காஞ்சிபுரம் அதிமுக நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர்,
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம்,உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், மோர், தர்பூசணிபழம், வெள்ளரிக்காய் போன்றவற்றை வழங்கினர்.
இந்நிகழ்வில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு
இணை செயலாளர் மூத்த வழக்கறிஞர் அகோரம்,
அவைத் தலைவரும் ஒன்றிய குழு உறுப்பினருமான
சந்திரபாபு, உட்பட ஒன்றிய கிளை
கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *