காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து தூய்மை பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என கட்சியை தொடங்கி அறிமுகம் செய்தார்.
நடிகர் விஜய் கட்சியை தொடங்கிய நாள் முதலே பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மாவட்ட கரசங்கால் ஊராட்சி தமிழக வெற்றி கழகம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு பொது மக்களின் தாகத்தை தீர்க்க நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடங்கி வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற கட்சியின் மாவட்ட செயலாளர் ஆனந்தன் ரிப்பன் வெட்டி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய், போன்றவற்றை வழங்கினர்.
தொடர்ந்து, 20 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி, 100 க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.