கண்டமங்கலம் அருகே உள்ள வெள்ளாழங்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல் அறுக்கும் சூளை உள்ளது. சூளையில் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள திருமால் ராயபுரம் பகுதியை சேர்ந்த குப்பன் (50)அவரது மகள் மருமகன் கல் அறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மகன் மருமகளை பார்ப்பதற்காக குப்பன் அப்பகுதிக்கு வந்துள்ளார். அவர்களைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு இன்று காலை 6 மணிக்குஊருக்கு செல்வதற்கு முன்பு அருகிலுள்ள முந்திரி தோப்புக்கு சென்று முந்திரி பழம் பறித்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை அழைத்துக் கொண்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *