கண்டமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பம்பை ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய கிடைத்தது அதன் பேரில் இன்று அதிகாலை3 மணிக்கு இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது பெரிய பாபு சமுத்திரம் பம்பை ஆற்றில் இருந்து ஒரு லாரி வருவதை போலீசார் பார்த்தனர். அப்போது அதனை நிறுத்தி சோதனை செய்தனர் . அந்த லாரியில் மணல் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர் டிப்பர் லாரியை ஒட்டி வந்த பள்ளிநேலியனூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் தினேஷ் ( 25) எண்பரை கைது செய்தனர்.

அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். லாரி உரிமையாளர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *