செய்தியாளர் கே பாலமுருகன்

காட்டுமன்னார்கோவில் தமிழ் சங்கம் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 133 வது பிறந்தநாள் விழா கடைப்பிடிக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் காட்டுமன்னார்கோவில் தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருகிறது சங்கத்தின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 வது பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது

நிகழ்ச்சிக்கு காட்டுமன்னார்கோவில் தமிழ் சங்கத்தின் தலைவர் தர்மர் பழனிச்சாமி தலைமை தாங்கினார் செயலாளர் கவிஞர் தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்
பேரூராட்சி மன்ற தலைவர் கணேசன் மூர்த்தி மற்றும் பொருளாளர் முருகசிவம் புலவர் முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்

முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பாவேந்தர் பாரதிதாசனின் அவர்கள் திருவுருவப்படத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் கணேசன் மூர்த்தி மற்றும் தலைவர் பழனிச்சாமி செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் மலர் தூவி மரியாதை இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் சின்னமணி குழந்தைசாமி பாண்டியன் இளங்கோவன் மாணிக்கவேல் ராசதுரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் முடிவில் திரைப்படப் புகழ் சரவெடி சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *