தாழம்பூர் காவல்துறை அறிவிப்பு.

செங்கல்பட்டு மாவட்டம்,தாழம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சச்சிதானந்தம் தெருவில் கடந்த 2023 டிசம்பர் மாதம் முதியோர் ஒருவர் சுமார் 50 வயது மதிக்க தக்க முதியோர் அனாதையாக இருப்பதை கண்ட பொது மக்கள்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் மயங்கிய நிலையில் கிடந்த முதியோரை மீட்டு யார் என
விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர் அவர் உடல் நெளிந்து காணப்பட்ட நிலையில் அந்த முதியோரை தாழம்பூர் காவல் துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் தாழம்பூர் காவல் நிலையத்தில் குற்ற எண்,1/2024,U/S 174, வழக்குப்பதிவு செய்யப்பட்டு உயிரிழந்த பெரியவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இந்நாள் வரை முதியவரை கான யாரும் வரவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நபரை பற்றி கண்டறிந்தால் உடனடியாக தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி காவல் நிலைய ஆய்வாளர்- 9962344474, உதவி ஆய்வாளர்- 9994482264,9498100303,T-18 தாழம்பூர் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *