வில்லிவாக்கம் செங்குன்றம் மேம்பாலம் அருகே பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வில்லிவாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் அவரது மகன் சரத்குமார் (வயது 30) இவர் இன்று நண்பகல் 1 மணியளவில் செங்குன்றம் வில்லிவாக்கம் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 7 மர்ம நபர்கள் வழிமறித்தனர் .

தன்னை கொலை செய்ய வருவதை கண்டு ரவுடி சரத்குமார் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார் ஆனாலும் மர்மநபர்கள் துரத்தி ஓடி தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் சரமாரியாக தலை முகம் மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பித்து ஓடினர்.

இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர் . பரபரப்பாக காணப்படும் மார்க்கெட் பகுதியில் பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றிய தகவல் அறிந்த கொளத்தூர் ராஜமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ‌ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் மாவட்ட காவல் துணை. ஆணையாளர் பாண்டியராஜன் மற்றும் உதவி கமிஷனர்கள் சிவகுமார், சகாதேவன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவில் பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்து பிடிக்க உத்தரவிட்டனர்.

இது பற்றி ராஜமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்கு பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை வலை வீசிதேடி வருகின்றார் .

இறந்த சரத்குமார் மீது பெரவள்ளூர் காவல் நிலைய பகுதியில் 2019 ல் ஜானகிராமன் என்பவரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் என தெரியவந்தது. எனவே இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *