நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், பேட்டையில் எழுந்தருளியுள்ள சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா மற்றும் பெண்கள் பூ வாரிப்போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதில் வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 23-ஆம் தேதி இரவு பூச்சாசாட்டுதல் மற்றும் கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கியது. விழாவை தொடர்ந்து இன்று அதிகாலையில் பக்தர்கள் காவிரி ஆற்றில் நீராடி தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இந்த தீமிதி திருவிழாவை முன்னிட்டு மதியம் அம்மனுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது இன்று மாலை தீமிதி விழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் ஆண்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூகுண்டத்தில் தீமிதித்தும் பெண்கள் பூ வாரி போடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இறுதியாக அம்பாள் சப்பாரத்தில் வந்தது கோவில்
வேல் பூசாரிகள் பூ குண்டத்தில் இறங்கினர்.

இதில் பரமத்திவேலுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று இரவு உற்சவர் அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை பொங்கல் மாவிளக்கு ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *