பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்! மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்- சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் திறந்து வைத்தனர்!

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில்,தமிழ்நாடு முதலமைச்சரின் வேண்டுகோளுக்கினங்க, பெரம்பலூர் நகர தி.மு.க‌.சார்பில், கோடை கால தண்ணீர் பந்தல், பெரம்பலூர் பாரத ஸ்டேட் பேங்க் அருகில்
அமைக்கப்பட்டிருந்தது. பெரம்பலூர் நகர தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை,
மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் – சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் திறந்து வைத்து, நீர்,மோர், பானகம், தர்பூசணி, இளநீர்,வெள்ளரிக்காய் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி,
மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், செ‌.அண்ணாதுரை, மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன்,
மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன்,
நகர துணை செயலாளர் சபியுல்லா, நகர பொருளாளர் முத்துகுமார்,மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அ.அப்துல்கரீம்,
மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பா.ரினோபாஸ்டின்,,
நகராட்சி உறுப்பினர்கள் சித்தார்த்,சேகர், சிவக்குமார், வார்டு செயலாளர்கள் கார்த்திகேயன்,விஜி, அஜய் ரோஹித், பசும்பலூர் கிளைச் செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *