பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
பாபநாசத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை அமமுக துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி திறந்து வைத்தார்….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பழைய பேருந்து நிலையம் அருகில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா பாபநாசம் நகரச் செயலாளர் பிரேம்நாத் பைரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்து நீர் மோர் பலன்கள் பொது மக்களுக்கு வழங்கினார்.
இதில் மாவட்ட அமைப்பாளர்கள் ஜெயராமன் ,ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் , பொதுக்குழு உறுப்பினர் திவாகரன் ,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் குமார் , நகர இணை செயலாளர் மணிமாறன் , ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சத்யா ,மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் வரதராஜன் , மாவட்ட இளம் பெண்கள் பாசறை செயலாளர் பிரகதீஸ்வரி , நிர்வாகி குழந்தைவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.