மனநலம் பாதிக்கப்பட்டு பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த பெண்ணை மீட்ட சமூக ஆர்வலர்
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்ட மிக வறுமை நிலையில் உள்ள குடும்பத்தால் கைவிடப்பட்ட ஆதரவற்றோர்களை மீட்டு அவர்களுக்கு காப்பகத்தில் மனநல சிகிச்சை அளித்து உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை பலர் மீட்கப்பட்டு நல்ல நிலையில் திரும்பிய நிகழ்வு நடந்துள்ளது. அந்த வரிசையில் பெரியகுளம் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 34 வயது மதிக்கத்தக்க பெண்ணை ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் வடகரை காவல்துறையினர் உதவியுடன் மீட்டு, பெரியகுளம் அரசு மனநல சிகிச்சை பிரிவில் சேர்த்து விடப்பட்டது.மேலும் சிகிச்சைக்குப் பின்பு அவரை குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.