பொறுப்பு முதல்வராக தர்மராஜ் நியமனம்
மதுரை அரசு மருத்துமவனை டீன் ரத்னவேல் நேற்று பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, பொறுப்பு டீனாக அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவ பிரிவு துறை பேராசிரியரும், மருத்துவமனை துணை கண்காணிப்பாளருமான தர்மராஜ் நியமிக்கப்பட் டுள்ளார்.


மதுரை அரசு மருத்தும வனை டீன் ரத்னவேல் நேற்று பணி ஓய்வு பெற் றதை தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி யில் அரசு டாக்டர்கள் சங்கம், செவிலியர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் என அனைவ ரது தரப்பிலும் நேற்று அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.

அரசு டாக்டர்கள் சங்க தலைவர் தலைவர் செந்தில், நிர்வாகிகள் செல்வ ராணி, ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கல்லூரி முதல்வரும், அரசு மருத்துவமனை டீனுமான ரத்னவேலு விற்கு நினைவு பரிசுகள் வழங்கி, பொன்னாடை போர்த்தி, பிரியாவிடை அளித்தனர். டாக்டர்கள், அலுவலர்கள், பணியா ளர்கள் என அனைவரும் கல்லூரி முதல்வர் ரத்ன வேல் தனது பணிக்காலத் தில் ஆற்றிய, அரசு மருத்துவமனை, கல்லூரி மேம்பாட்டிற் கான பணிகள் குறித்து பேசியது அனைவரையும் நெகிழ்வடையச் செய்தது. இந்நிலையில் மருத்துவக்கல்வி இயக் குநரகம் நேற்று மாலைமதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கான பொறுப்பு டீனாக தர்மராஜை நியமித்து உத்தரவிட்டது.

மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பிரிவு துறை பேராசிரியர், அரசு மருத்துவமனை யின் துணை கண்காணிப் பாளராக இருந்து வரும் தர்மராஜ், கூடுதலாக பொறுப்பு முதல்வர் பதவியையும் ஏற்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *