தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு
10.05.2024 அன்று உள்ளுர் விடுமுறை அளித்து
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர் . வி. ஷ ஜீவனா உத்தரவிட்டுள்ளார்.

             தேனி மாவட்டம், வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா வரும் மே 07.05.2024 முதல் 14.05.2024 வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10.05.2024 வெள்ளிக்கிழமை  நடைபெறுவதால் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து    மாநில அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த துறைகள் மற்றும் அனைத்து விதமான கல்வி நிலையங்களுக்கும் 10.05.2024 அன்று உள்ளுர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.

            இந்த உள்ளுர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம்-1881  நெக்கோ டைபில் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ஆக்ட் 1881                                  )கீழ் வராது என்பதால், அன்றைய தினம் தேனி மாவட்டத்தில் தலைமை கருவூலம்  சார்நிலை கருவூலகங்கள் மற்றும் அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன்  செயல்படும்.

           மேலும் மேற்குறிப்பிட்ட உள்ளுர் விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் மே 25.05.2024 சனிக்கிழமை அன்று மாற்று வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் த ஆர்.வி.ஷஜீவனா. தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *