விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் மொரட்டாண்யில் அமைந்துள்ளது தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் அதிகாலை 4;45 மணியளவில் சிதம்பரத்தில் இருந்து புதுச்சேரி toதிண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை வழியாக பெருமுக்கல் என்ற இடத்திற்கு ஜல்லி ஏற்றுவதற்க்காக TN AM9537 என்ற பதிவு எண் கொண்ட கனரக வாகனம் பெருமுக்கலை நோக்கி வந்தது.

இந்த வாகனத்தை சிதம்பரத்தை சேர்ந்த துரைராஜ் என்ற ஓட்டுநர் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார், இன்று அதிகாலை 4:45 மணியளவில் மொரட்டாண்யில் அமைந்துள்ளது

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் அனைத்து வாகனங்களும் வரிசை படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருந்த சுவற்றில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து படு பயங்கரமாக மோதியது.

இதில் வாகனத்தின் பின் சக்கரங்கள் உடைந்து சாலையின் நடுவில் வாகனம் நின்றது, இதில் ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார், வேறு எந்த உயிர் சேதங்களும் ஏற்படவில்லை;

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *