தென்காசி இரத்ததான கூட்டமைப்பு சார்பாக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த இரத்ததான முகாமில் சுமார் 25 ற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தங்கள் குருதியினை தானமாக வழங்கினார்கள்.
இரத்ததானம் வழங்கிய இரத்த கொடையாளர்களுக்கு தென்காசி அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் பாபு பாராட்டு சான்றிதழை வழங்கினார். இந்த இரத்ததான முகாமில் தென்காசி மாவட்ட இரத்ததான கூட்டமைப்பின் தலைவர் முகம்மது அன்சாரி,செயலாளர் கோபி, பொருளாளர் கார்த்திக்,ஆலோசகர் முகமது காமில், துணைத்தலைவர் பூக்கடை சரவணன் துணைச் செயலாளர்கள் சுரேஷ் சிவம் மற்றும் மகேஷ்வரி ,துணை பொருளாளர் முகம்மது அன்சர் , ஒருங்கிணைப்பாளர்கள் மாரியப்பன், அருண் கண்ணன் மற்றும் சுமு முருகன் ,நிர்வாகிகள் வனிதா,அஜய்,சிவா,முகமது தாரிக் ,காலித் அன்சர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தென்காசி மாவட்ட இரத்ததான கூட்டமைப்பின் மூலம் தானமாக வழங்கிய குருதியினை தென்காசி அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் பாபு மற்றும் அவர்களது இரத்த வங்கி குழுமம் பெற்றுக்கொண்டனர்.
மேலும் தென்காசி மாவட்ட இரத்ததான கூட்டமைப்பின் மூலம் நடத்தப்படும் இந்த ஆண்டின் மூன்றாவது இரத்தததான முகாம் என்பது குறிப்பிடத்தக்கது .