மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்தது இதில் பயணம் செய்த குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர்

சென்னை அம்பத்தூர், வியாசர்பாடி, பெரம்பூர், கொளத்தூர், பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் தங்களது குடும்பத்துடன்ஊட்டிக்கு சுற்றுலா செல்வதற்காக கடந்த 30ஆம் தேதி ரயில் மூலம் புறப்பட்டு ஒன்றாம் தேதி காலை மேட்டுப்பாளையம் வந்தடைந்தனர்.

இங்கிருந்து மினி பேருந்து ஒன்று ஏற்பாடு செய்து அதன் மூலம் ஊட்டிக்கு சென்றுள்ளனர் இரண்டு நாட்கள் உதகையின் அனைத்து பகுதிகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு கோத்தகிரி சாலை வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்

அப்பொழுது மினி பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கிடுகிடு பள்ளத்தில் கவிழ்ந்தது இதில் பேருந்தில் பயணம் செய்த16 பெரியவர்கள் 15 குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் உட்பட அனைவரும் படுகாயம் அடைந்தனர்

பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதில் படுகாயம் அடைந்த 10 பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *