சோழபுரம்மழை வேண்டி சிறப்பு தொழுகையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

சோழபுரம் அல் அக்ஸா தவ்ஹீத் மஸ்ஜித் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.இதில் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம் காவிரி டெல்டா பகுதிகளில் வெயிலில் தாக்கம் அதிகமாகி வறட்சி நிலவி வருவதால், குளங்கள் முற்றிலுமாக
தண்ணீர் வரத்து இன்றி வெறும் காட்சியளிக்கின்றது.

மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு முற்றிலும் நீர்வரத்து இன்றி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

இதனால் காவிரி டெல்டா பகுதியில்
நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் மானாவரி நிலங்களில் விவசாய நிலங்கள் மழை இல்லாமல் துவண்டு வருவதால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் சோழபுரம் அல் அக்ஸா தவ்ஹீத் மஸ்ஜித் சார்பில் மார்க்க அறிஞர்கள் தலைமையில் இப்பகுதியில் வரட்சி நீங்கி மழை பெய்வதற்கு அதிகாலை பொழுதில்சிறப்பு திடல் தொழுகையில் ஈடுபட்டனர்.

இந்த சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மேல் கலந்துகொண்டு உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *