பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் ஊராட்சியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதாகவும் இதனால் வி.களத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ராயப்பா நகர், மேட்டுச்சேரி பிம்பலூர்,மறவனத்தம், திருவாலந்துறை உள்ளிட்ட பகுதிகளில் மின்விளக்குகள் மற்றும் குடிநீர் தேவைக்கு மின் மோட்டார் போன்றவை சரியாக உபயோகிக்க முடியவில்லை எனக்கூறி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யவில்லை எனவும் குறைந்த மின்னழுத்தத்தால் வீடுகளில் மின் மோட்டார் இயங்கவில்லை எனவும் இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதியடைவதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பொது மக்களிடம் வி.களத்தூர் காவல்துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலை மறியலில் கலைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *