இளையராஜா தொடர்ந்துள்ள வழக்கு அது இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள பிரச்சனை நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் தெரிவித்துச் சென்றார்.

நடிகர் ரஜினிகாந்தின் 170வது திரைப்படமான வேட்டையன் படத்தை இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கி வருகிறார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஐதராபாத், ஆந்திரா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தன.

இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 2ந் தேதி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மும்பைக்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார்.

மும்பையில் படப்பிடிப்பு முடித்து கொண்டு மதியம் 12 .00 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் அப்போது சென்னை விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் விசாக வரவேற்பு அளித்தனர் சென்னை விமான நிலையத்தில் வெளியே வரும் வாயில் வந்த பொழுது அவரது ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து வெளியே வரும் வாயில் வழியாக வந்த போது நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது செய்தியாளர்கள் நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் கேள்விகளை எழுப்ப தொடங்கினார்கள் அப்போது கூலி படத்தின் வரவேற்பு பற்றி கேட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த்

கூலி படத்தின் வரவேற்பு ரொம்ப நல்ல இருக்கிறது இன்று தெரிவித்தார் மேலும் செய்தியாளர்கள் இளையராஜா தொடர்ந்துள்ள copy rights வழக்கு குறித்து கேட்டபோது

அது இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையிலான பிரச்சனை என கூறியதோடு அடுத்து வரவிருக்கும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *