நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எரிந்த நிலையில் சடலாம் படுகொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கலை சுற்று புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கே பி கே ஜெயக்குமார் இவர் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார்
இவரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காணவில்லை என இவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்
இந்த நிலையில் இவரது உடல் அந்த கிராமத்தில் எரிந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த விசாரணையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தனக்கு சிலர் மற்றும் காங்கிரஸ் கட்சி சேர்ந்த சிலர் தன்னை கொலை மிரட்டல் விடுவதாக கூறி நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்துள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இவர் எந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது
தொடர்பாக போலீசா தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவராக இருந்த கே பி கே ஜெயக்குமார் எரிந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக ஐந்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் இவரை யாராவது கடத்தி சென்று பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்தார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என போலீசா தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் உயிரிழந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது