தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் கழுதை பால் விற்பனை அமோகம்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கிராமப்புற பகுதிகளில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டி கோகிலாபுரம் ராயப்பன்பட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கு கழுதை பால் வழங்கினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக பொதுமக்களிடம் நம்பிக்கை உள்ளது

ஒரு சிறிய சங்கு அளவுள்ள கழுதை பால் ஐம்பது வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராம பகுதிகளில் கிராம மக்கள் கழுதை பாலால் குழந்தைகளுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்ற அச்சம் இல்லாமல் கழுதை பாலை வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து வருகிறார்கள். எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த கழுதை பால் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *