பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
ஜெயங்கொண்டம் அடுத்த தென்னவநல்லூர் கிராமம் வழியாக விக்கிரவாண்டி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சேல்கிறது இதில் தென்னவ நல்லூர் பகுதியில் மேம்பாலம் அமைத்து தர அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தென்னவநல்லூர் கிராமத்தின் வழியே செல்லும் விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தென்னவ நல்லூரில் மேம்பாலம் அமைத்து தரவும் சாலையை அகலப்படுத்தி தரவும் கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
இது தொடர்பாக 04.5.2024 அன்று உடையார் பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் கிராம பொது மக்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த அமைதி பேச்சு வார்த்தையில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர், தேசிய நெடுஞ்சாலை துறை வட்டாட்சியர், ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர், மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் , NHAI மற்றும் பட்டேல் குழும அலுவலர்கள் ,வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.