கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.கலை அறிவியல் கல்லூரி சார்பாக 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருது வழங்கும் விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது..

பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில் துணை தலைவர் அக்‌ஷய் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் முனைவர் முத்துமணி அனைவரையும் வரவேற்று பேசினார்..
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தஞ்சை பல்கலைகழக முன்னால் துணை வேந்தர் டாக்டர் சி.சுப்ரமணியம் கலந்து கொண்டார்..முன்னதாக பி.பி.ஜி கல்விக் குழுமத்தலைவர் மருத்துவர் எல்.பி தங்கவேல் பேசும் பொழுது பிற தொழில்களை காட்டிலும் மேன்மையானது ஆசிரியர் தொழிலே அத்தகைய சிறப்புமிக்க ஆசிரியர்களுக்கு விருது வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் என்றார்..

தொடர்ந்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் சி. சுப்ரமணியன் சிறப்புரையாற்றும் போது சமூகத்தில் மாணவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்கவதே ஆசிரியரின் தலையாய கடமை என்றார்.

விழாவில்,கோவை,பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களை சேர்ந்த தனியார் பள்ளி,,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்…

இதில் தமிழ் மொழி,ஆங்கிலம்,கணிதம்,அறிவியல்,பொருளாதாரம்,வணிகவியல் என பல்வேறு துறை சார்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டு விருதுகள் பெற்றனர்.. நிகழ்வின் இறுதியாக தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஹரிதாஸ் நன்றியுரை ஆற்றினார்

கோவை பி.பி.ஜி.கல்வி குழுமம் சார்பாக 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது…

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.கலை அறிவியல் கல்லூரி சார்பாக 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருது வழங்கும் விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது..

பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில் துணை தலைவர் அக்‌ஷய் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் முனைவர் முத்துமணி அனைவரையும் வரவேற்று பேசினார்..
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தஞ்சை பல்கலைகழக முன்னால் துணை வேந்தர் டாக்டர் சி.சுப்ரமணியம் கலந்து கொண்டார்..

முன்னதாக பி.பி.ஜி கல்விக் குழுமத்தலைவர் மருத்துவர் எல்.பி தங்கவேல் பேசும் பொழுது பிற தொழில்களை காட்டிலும் மேன்மையானது ஆசிரியர் தொழிலே அத்தகைய சிறப்புமிக்க ஆசிரியர்களுக்கு விருது வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் என்றார்..

தொடர்ந்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் சி. சுப்ரமணியன் சிறப்புரையாற்றும் போது சமூகத்தில் மாணவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்கவதே ஆசிரியரின் தலையாய கடமை என்றார்.
விழாவில்,கோவை,பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களை சேர்ந்த தனியார் பள்ளி,,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்…

இதில் தமிழ் மொழி,ஆங்கிலம்,கணிதம்,அறிவியல்,பொருளாதாரம்,வணிகவியல் என பல்வேறு துறை சார்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டு விருதுகள் பெற்றனர்.. நிகழ்வின் இறுதியாக தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஹரிதாஸ் நன்றியுரை ஆற்றினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *