தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்ந்த கிளைகள் முழுவதும் மழை வேண்டி சிறப்பு தொழுகை

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதாலும், இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்பு உள்ளாகின்றனர், இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழகம் முழுவதும் இலவச மோர்பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது அது மட்டுமல்லாமல் கோடை வெப்பத்திலிருந்து மக்களை காக்கும் வகையில் மழை வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கிளைகளிலும் மழை வேண்டி தொழுகை நடைபெற்றது திருவாரூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிளைகள் தோறும் இன்று மழை வேண்டி தொழுகை நடைபெற்றது

திருவாரூர் நகரத்தில் திருவாரூரில் நகரத் தலைவர் மீரான் தலைமையில் செல்வம் தெருவிலும் அதேபோன்று அடியக்கமங்கலத்தில் கிளை தலைவர் ருமைசுதீன் தலைமையில் நடுத்தெருவிலும் கூத்தாநல்லூரில் நகரத் தலைவர் அப்துல் காதர் தலைமையில் அல்லி கனி மைதானம் அருகில் உள்ள கமாலியா தெருவிலும் தண்ணீர் குன்னத்தில் கிளை தலைவர் கலிபுல்லா தலைமையில் மேலத்தெருவிலும் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது அனைத்து கிளைகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் மழை வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *