திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் சிங்காரிபாளையம் கந்தசாமி மகன் செல்வகுமார் (வயது 30) விவசாய தொழிலாளியான இவர் புறவழிச் சாலை பகுதியில் திருப்பூர் தாராபுரம் ரோட்டில்சாலையின் எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார்.

அப்போது திருப்பூரில் இருந்து திருநெல்வேலி செல்வதற்காக ஸ்கோடா சொகுசு காரில் கோவை மாவட்டம் ரத்தினபுரி பகுதியில் வசிக்கும் குமார் மகன் புவனேஷ் (வயது-43 )வேங்கி
பாளையம் முத்துசாமி தோட்டம் அருகே வந்து கொண்டிருந்தபோது அதே திசையில் வந்த செல்வகுமார் இருசக்கர வாகனத்தின் மீது கண் இமைக்கும் நேரத்தில் கார் பைக் மீது மோதியதில் விவசாயி செல்வகுமார் 100,மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த குண்டடம் போலீசார் மற்றும் சாலை பராமரிப்பு குழுவினர் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேதபரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பைக் மீது கார் மோதிய விபத்து குறித்து குண்டடம் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் விவசாயி செல்வகுமார் எதிர் திசையில் ஹெல்மெட் அணியாமல் சாலையை கடந்தது விபத்திற்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *