காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது இந்த திருக்கோவிலில் தான் 1007 ஆண்டுகளுக்கு முன்பு வைணவ மதத்தில் பிறந்து பல சமூக சீர்திருத்தங்கள் செய்த ஸ்ரீராமானுஜர் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில் பிறந்தார்

அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் மக்கள் ஸ்ரீஆதிகேசவ பெருமாளை பெரியவர் என்றும் ராமானுஜரை சிறியவர் என்றும் அழைப்பது வழக்கம்
மேலும் சித்திரை மாதம் ஸ்ரீஆதிகேசவ பெருமாளுக்கு 10 நாட்களும் ஸ்ரீ ராமானுஜருக்கு அவதார உற்சவம் 11 நாட்கள் என தொடர்ந்து 21 நாட்கள் ஆண்டு தோறும் விழா நடைபெறுவது வழக்கம்

இந்நிலையில் இத்திருக்கோவிலின் சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதியில் இருந்து ஸ்ரீராமானுஜர் அவதார உற்சவம் துவங்கிய நிலையில் தங்க பல்லக்கு, புஷ்ப பல்லக்தில் காட்சியளித்த ஸ்ரீராமானுஜர் 3 ஆம் நாளான இன்று மங்களகிரி உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

செண்டை மேளம் முழங்க ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஸ்ரீராமானுஜரின் மங்களகிரி உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு
ஸ்ரீராமானுஜர் வழிபட்டனர்

இதனைத் தொடர்ந்து வரும் 11 ஆம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *