தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சண்டே கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நடைப்பெற்று அதன் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார்

முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் தங்க செல்வம் மாவட்ட பிரதி அன்பழகன், சோனா மகேஷ், ஆகியோர்கள் முன்னிலை வைகித்தனர்.

சண்டே கிரிக்கெட் கிளப் நிர்வாகி பிரகாஷ் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட தொண்டர் அணி தலைவர் வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் செல்வன், சின்னவர் உதய நீதிமன்ற தலைவர் அருணா பாண்டியன். உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


நடைப்பெற்ற போட்டியில் மணிமுத்தாறு போலீஸ் அணி முதல் பரிசை வென்றது அவர்களுக்கு ரூபாய் பத்தாயிரமும் கோப்பையும் வழங்கப்பட்டது இரண்டாவது இடத்தை சண்டே கிரிக்கெட் கிளப் பணி பெற்றது அவர்களுக்கு கோப்பையும் ரூபாய் 8000 வழங்கப்பட்டது…

மூன்றாவது இடத்தை ஆலங்குளம் ஏசிசி அணி வெற்றி பெற்றது அவர்களுக்கு ரூபாய் 5000 கோப்பையும் வழங்கப்பட்டது
நான்காவது இடத்தை குருவன்கோட்டை சேர்ந்த மினி குருவை அணி பெற்றது அவர்களுக்கு ரூபாய் 3000 கோப்பையும் வழங்கப்பட்டது

அதனை தொடர்ந்து ஐந்தாவது இடத்தை குத்த பஞ்சாப் என்சிசி அணி வெற்றி பெற்றது அவர்களுக்கு ரூபாய் 3000 கோப்பையும் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *