தென்காசியில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி போக்குவரத்து ஆய்வாளர் துவக்கி வைத்தார்.
தென்காசி
தென்காசியில் நீதியின் நுண்ணறிவுக் குழுமம் மற்றும் தென்காசி ரத்ததான கழக கூட்டமைப்பு இணைந்து சர்வதேச பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்க விழிப்புணர்வு மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் தென்காசி நகரின் மையப் பகுதியான யானை பாலம் சிக்னலில் வைத்து நீதியின் நுண்ணறிவுக் குழுமம் மற்றும் தென்காசி ரத்ததான கழக கூட்டமைப்பு இணைந்து கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்க விழிப்புணர்வு மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு நீதியின் நுண்ணறிவு குழுமத்தின் நிர்வாகி ஆனந்த் தலைமை தாங்கினார். தென்காசி ரத்ததான கழகத்தின் கூட்டமைப்பின் தலைவர் பூக்கடை சரவணன் முன்னிலை வகித்தார்.
தென்காசி போக்குவரத்து ஆய்வாளர் எம் எஸ் மணி தென்காசி மாவட்ட முதல் பெண் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சாந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோரினை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் நீதியின் நுண்ணறிவு நிர்வாகிகள்
ஆர்.பூவையா, ஆர்.மகேந்திரன் தென்காசி ரத்ததான கழக கூட்டமைப்பினுடைய நிர்வாகிகள் பூக்கடை சரவணன், கோபி, முகமது அன்சர் மற்றும் தென்காசி நகர கோபால் @செந்தில், வழக்கறிஞர்கள் காசிப்பாண்டியன் திருமலைக்குமார், சி.மாரிச்செல்வி, மற்றும் பணி நிறைவு பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நயினார் உள்ளிட்ட சிறுவர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தென்காசியில் சுட்டெரிக்கும் வெயிலில் தாகம் தணிக்க பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதசாரிகள் என பலரும் நீர் மோர் வாங்கிப் பருகியதோடு இந்த நிகழ்ச்சியை நடத்திய
நீதியின் நுண்ணறிவுக் குழுமம் மற்றும் தென்காசி ரத்ததான கழக கூட்டமைப்புகளின் நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.