மதுரை சிறைச்சாலையில் தேர்வு எழுதிய 15 கைதிகள் தேர்ச்சி

500 மதிப்பெண்களுக்கு அதிகமாக 3 பேர் பெற்றுள்ளனர்…

மதுரை மத்திய சிறைச்சாலையில் 1500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகள், தாங்கள் படிக்க விரும்பும் படிப்புகளை தொடர்வ தற்காக சிறை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் காரணமாக ஆண்டு தோறும் நிறைய கைதிகள் பொதுத் தேர்வுகளை எழுதி வருகின்றனர். இந்தநிலையில், இந்த ஆண்டிற்கான
பிளஸ் – டூ பொதுத் தேர்வினை மதுரை மத்திய சிறைச் சாலையில் உள்ள 15 கைதிகள் எழுதினர். இதில் 15 பேரும் வெற்றி பெற்று, 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ஆரோக்கிய ஜெய பிரபாகரன் என்பவர் 600-க்கு 536 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அலெக்ஸ் பாண்டியன் 532 மதிப்பெண்களும், அருண்குமார் 506 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர்.
தேர்ச்சி பெற்ற கைதிகளுக்கு சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். மதுரை மத்திய சிறையில் இந்த ஆண்டு பிளஸ் டூ பொதுத்தேர்வை பெண் கைதிகள் யாரும் எழுத வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *