வேப்பூரில் இந்திய குடியரசு கட்சி முன்னால் தலைவர் மூர்த்தியின் 32-வது நினைவு நாள்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அன்னை தெரசா நர்சிங் கல்லூரியில் முன்னால் எம்எல்ஏவும் இந்திய குடியரசு கட்சி தலைவருமான மூர்த்தியின் 32- வது நினைவு நாள் அனுஷ்டிக்கபட்டது
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தங்க.ராஜீவ்காந்தி முன்னிலை வகித்தார்
சிறப்பு அழைப்பாளராக இந்திய குடியரசு கட்சி
மாநில பொதுச் செயலாளர் மங்காபிள்ளை கலந்து கொண்டு முன்னால் மாநில தலைவர் ஜி.மூர்த்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்
.நிகழ்ச்சியில் விருதை நகர தலைவர் இராஜேந்திரன், நல்லூர் ஒன்றிய நிர்வாகிகள் பூவராகவன்,செந்தில்குமார் , இராமச்சந்திரன், விருதை ஒன்றிய நிர்வாகிகள் ஜெயசீலன்,பிரபாகரன், பீமராவ் அம்பேத்கர் பவுண்டேசன் துணை செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்