கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம் மற்றும் வெப்பச்சலன விழிப்புணர்வு குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர், எரிசக்தி துறை மரு.பீலா வெங்கடேசன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு அவர்கள் முன்னிலையில், அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் (08.05.2024 ) அன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், கூடுதல் ஆட்சியர் வந்தனா கர்க் ஓசூர் மாநகராட்சி ஆணையர் தி.சினேகா ஓசூர் சார் ஆட்சியர் செல்வி.பிரியங்கா மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயாயிணி மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்முக உதவியாளர் (பொது) பி.புஷ்பா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளனர்.