திருவள்ளூர்

விட தண்டலம் பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்தின் 15 ஆம் ஆண்டு சித்திரை கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்து ஊர்வலமாக வந்து முருகனை வழிபட்டனர். இதில் கிரேன் மூலம் பக்தர்கள் அலகு குத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மெதூர் ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட்ட விட தண்டலம் கிராமத்தில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற அருள்ஸ்ரீ பாலசுப்பிர மணிய சுவாமி ஆல யம் உள்ளது. இந்த ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு சித்திரை கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து அழகு குத்தியும் காவடி எடுத்தும் சுமார் 1கிலோ மீட்டர் தூரம் ஊர்வ லமாக வந்து நேர்த்திக் கடன் செலு த்தி பாலசுப்ரமணிய சுவாமி வழி பட்டனர்.

முன்னதாக சம்பவதன்று காலை 6 மணி முதல் 7:00 மணிக்குள்ளாக விநாயகர் சன்னதியில் இருந்து அலங்கார காவடி அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வேல் தரித்தல் காவடி பிரார்த்த னை நடைபெற்றன. இதில் பக்தர் கள் சிலர் கிரேன் மூலம் அலகு குத்தி வந்த சம்பவம் பெரும் பரபர ப்பை ஏற்படுத்தியது.

பின்னர் பக்தர்கள் அனைவரும் வீதி உலா வந்து பாலசுப்பிரமணி யர் கோயிலை சென்றடைந்தனர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பையூர் கோட்டை வேளாளர் மரபி னர் மற்றும் கிராம பொதுமக்கள் விடத்தண்டல் கிராமத்தைச் சேர் ந்த வி.பி. ஷண்முக சுந்தர்ராஜபாபு முதலியார், வி.பி.விநாயக முதலி யார் உள்ளிட்ட பலர் செய்திருந்த னர்.

நிகழ்ச்சியில் சுற்று பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர் கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர் பின்னர் முடிவில் அனைத்து பக்தர்களுக்கு அன்ன தான பிரசாதங்கள் வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *