வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் இரண்டாவது நாளில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்

உலகப் பிரசித்தி பெற்ற வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மே 7 முதல் தொடங்கி 14 வரை நடைபெற உள்ளது

நேற்று மே 8 இரண்டாவது நாள் திருவிழாவில் எந்தப் பக்கம் திரும்பினாலும் பக்தர்கள் கூட்டத்தால் கவுமாரியம்மன் கோயில் வளாகம் நிரம்பி வழிந்து பக்தர்கள் கூட்டம் அலை மோதியது நேற்று கோவில் வீட்டிலிருந்து அம்மன் திருவாரண பெட்டி கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது

அம்மன் மின் ரதத்தில் பவனி வந்தார் இதனைத் தொடர்ந்து மண்டகப்படி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பக்தர்கள் குடும்பத்துடன் திருவிழாவுக்கு வருவதால் அனைத்து திசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது ஆயிரம் கண் பானை எடுத்தல் அக்கினி சட்டி எடுத்தல் காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி கௌமாரி அம்மனை பக்தர்கள் தரிசித்து வருகிறார்கள் நேற்று இரவு அம்மன் முத்து ப் பல்லாக்கில் புறப்பாடு நடைபெற்றது

பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான நாளை மே 10 வெள்ளிக்கிழமை தேர்த் திருவிழா நடக்க உள்ளது இதனை ஒட்டி மாவட்ட நிர்வாகம் தேனி மாவட்டம் மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *