செங்குன்றம் செய்தியாளர்
ரெட்டேரி விநாயகபுரம் வழியாக செங்குன்றம் செல்லும் நெடுஞ்சாலை விநாயகபுரம் கல்பாளயத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 43) என்பவருக்கு சொந்தமான செந்தில் மெடிக்கல் கடந்த 3 தேதி அன்று கடை ஷட்டரின் பூட்டை உடைத்து 8 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.

இதுகுறித்து புழல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து புழல் சரக உதவி கமிஷனர் சகாதேவன் தலைமையில் சிறப்பு தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபரின் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து சுமார் 129 இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து குற்றவாளியை தேடி வந்த நிலையில், நேற்று மதியம் புழல் அடுத்த கதிர்வேடு மேம்பாலத்தின் கீழ் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சந்தேகப்படும்படியான நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில்,
அவர் ஆதம்பாக்கம் அடுத்த கரிமடுவதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரது மகன் பிளக்ஸ்ஜெயபால் (வயது 18 ) என்பவர் என தெரியவந்தது.

போலீசாரின் விசாரணையில் ஆதம்பாக்கத்தில் இருந்து தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் மாதவரம் வந்து மது அருந்திவிட்டு நள்ளிரவில் இந்த பகுதியை நோட்டமிட்டு கொள்ளையடித்ததாக ஒப்புக்கொண்டார்.

பின்னர் புழல் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் புகாரி , பிளக்ஸ் ஜெயபாலை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்த 1. 52 ஆயிரம் பணத்தையும் , இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *