ஆலங்குளத்தில் பள்ளி கல்வித்துறை
சார்பில் உயர் கல்வி வழிகாட்டி உறுப்பினர் களுக்கான பயிற்சி:-

தென்காசி மாவட்டம் பள்ளி கல்வித்துறை
சார்பில் ஆலங்குளம் வட்டார வள மையம் பயிற்சி கூட்ட அரங்கத்தில் உயர் கல்வி வழிகாட்டி உறுப்பினர் களுக்கான பயிற்சி நடைப்பெற்றது

ஆலங்குளம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜீவா தலைமை தாங்கினார் ஆசிரியர் பயிற்றுநர் பவித்ரா வைதேகி முன்னிலை வகித்தார் இப் பயிற்சியில்பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் உயர் கல்வியை தொடர வேண்டும் பொது தேர்வு எழுதாத , மற்றும் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகள் துணை தேர்வு எழுதி உயர் கல்வியை தொடர வேண்டும் எனபன கருத்துக்கள் வழங்கப்பட்டன

இந்த நிகழ்வில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள், மற்றும் துணை தலைவர்கள் பள்ளி முன்னாள் மாணவர்கள், கல்லூரி நியமிக்கப்பட்ட என்.எஸ் எஸ் கல்லூரி மாணவர்கள் உள்ளபட பலர் கலந்து கொண்டனர்.

பயிற்சி முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் ராஜா நன்றியுரை வழங்கினார் அதனை யெடுத்து கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *