திருப்போரூர் மே 11

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களின் தாகம் தீர்க்க ஆங்காங்கே தண்ணீர் பந்தலை திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் ஊராட்சி ஜோதி நகர் திமுக கிளை செயலாளர் கே ஏ டி அன்பு ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம் எல் ஏ வும், திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவருமான எஸ் ஆர் எல் இதயவர்மன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கும் தர்பூசணி, இளநீர், நீர் மோர், பனை நுங்கு, வெள்ளரிப்பிஞ்சு, பழ வகைகளை வழங்கினார் நிகழ்ச்சியில் திமுக தலைமை பொது குழு உறுப்பினர் அன்பு செழியன் ஒன்றிய துணை செயலாளர் வெண்பேடு ரமேஷ் மக்கள் பிரதிநிதிகளுடன் மகளிரணி பொறுப்பாளர் தனக்கோட்டி அன்பு திமுக நிர்வாகிகள் வாசுதேவன் தி க பாளையம், அசுந்தன் ராஜா கண்ணன், நிஷாந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *