வட்டாட்சியாளர் அலுவலகத்தில் அடிதடி!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கிடையே அடிதடி ஏற்பட்டது.
சங்கரன்கோவிலுக்கு அருகே உள்ளது மேல வயலி கிராமம். இந்த கிராமத்தில் சந்தன மாரியம்மன் என்கின்ற பிரசித்தி பெற்ற கோவில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறுவதுண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழாவை யார் நடத்துவது என்று கிராம மக்களுக்கு இடையே பிரச்சனை இருந்து வந்தது.
இந்தத் தகவலை அறிந்த போலீசார் ஆர்டிஓ என்கொயரிக்காக பரிந்துரைத்தனர். அதன் பேரில் இன்று விசாரணை நடை பெற இருந்தது.
ஆகவே ஆர்டிஓ அலுவலகத்திற்கு இரு தரப்பினரும் வந்த நிலையில் அங்கிருந்த வட்டாட்சியர் அலுவலகத்தின் முன் அவர்களுக்குள் அடிதடி ஏற்பட்டது.
ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் பலமாக தாக்கிக் கொண்டதால் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்ற வகையில் ஒரு வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்.