பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நேஷனல் கல்வி குழுமத்தின் நிறுவனத் தலைவர் சிலம்புசெல்வன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கசொக கண்ணன் முன்னிலை வகித்தார்
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு சிவசங்கர், மற்றும் தி ரைசிங் சன் ஆங்கில இதழ் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் துவக்கி வைத்து சிறப்புரையும், மாவட்ட ஆட்சியர் திருமதி ரமண சரஸ்வதி வாழ்த்துரையும் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியின் துவக்கமாக நேஷனல் கல்வி குழுமங்களின் செயலாளர் சங்கரநாராயணன் வரவேற்புரை ஆற்றினார் இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கேடயங்களும் பாராட்டும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன
இதில் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமராஜன்
நன்றியுரை வழங்கினார்.