கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அம்மா உணவகத்தில் மலிவு விலையில் பொதுமக்களுக்கு தினந்தோறும் காலையில் இட்லி, பொங்கல் மதியம் சாதம், சாம்பார், ரசம் மற்றும் சாம்பார் சாதம் வழங்கப்பட்டு வந்த நிலையில் சில தினங்களாக உணவகத்தில் கிரைண்டர் பழுதாகி இருந்த நிலையில் காலையில் இட்லி வழங்கமுடியாமல் பொங்கல் வழங்கப்பட்டு வந்ததாகவும் இதனால் முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் வேதனையடைந்து வந்துள்ளனர்.
இத்தகவலறிந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தனது சொந்தச் செலவில் புதிய கிரைண்டரை அம்மா உணவக பணியாளர்களிடம் வழங்கினார் மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க அதற்கான இயந்திரமும் வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின் போது நகச்செயலாளர் மயில் கணேசன், துணைச்செயலாளர் பொன்கணேசன், 17 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜே.மணிகண்டன், வார்டு செயலாளர் எஸ்.கே.எஸ்.பாலு, நிர்வாகிகள் ஏகசிவநாதன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.