மேலூர் செய்தி. சம்பத்,செய்தியாளர்
மேலூர் அருகே டி.ஆண்டிபட்டியை சேர்ந்தவர் முனிசாமி(33). இவர் சிமிண்ட் கலவை மிஷின் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
இவர் ஜல்லிக்கட்டு காளை மாடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த ஜல்லிக்கட்டு காளை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் வீட்டில் கட்டி வைத்திருந்த அந்த ஜல்லிக்கட்டு காளை கட்டை அவிழ்த்துக்கொண்டு ஓடி உள்ளது. முனிசாமி வழக்கம் போல அந்த காளை மாட்டை பிடிக்க சென்றுள்ளார். அப்போது அந்த ஜல்லிக்கட்டு காளை முனிசாமியை முட்டி படுகாயமடைந்தார்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அவர் வரும் வழியில் இறந்துபோனார். இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.